அநிருத்தத் தவளை

Saturday, August 22, 2015



அநிருத்தன்
பிறந்து
தவழ்ந்து
வளர்ந்தான்.
தன்மொழி விழுங்கினான்;
தத்துவம் முழுங்கினான்;
கக்கியது கருத்து செருக்கில்;
அகலம் காட்ட அநிருத்தத்
தவளை எட்டித் தாவியது;
பட்டென விழித்தது சர்ப்பம்;
முட்டைக் கிரகணம் முளைத்தது;
உண்ட களைப்பில்
உடல் விகாரப்பட்டு
ஒரு புன்கவிதை
ஒழுக்கி ஒழுக்கிப்
போனது
பாம்பு.
-/. 08/21/2015/22:19கிநிநே

0 comments: