இரைச்சலுடன் மோதிக்கொல்லும் சொற்களிடையே
என் கைப்பத்திரத்தை நசுங்காமல் நகர்த்திடக்கூடும்
எந்நாளும் சுகந்தம்.
ஊனற்சவங்களில் எழும் கவிதைகளிலே பூப்பிடுங்காது
நகரும் என் காலம் வசந்தம்.
உக்கும் உடல்கள் உயிர்வாயுவை மட்டுமே கேட்கிறன
கவிதை என்ற பெயராட்டும் உன் எழுத்துச்சரையை
நுனி முறித்துச் சிதையெரி.
பேசாதிருக்கும் பொழுதெல்லாம் நிறையப் பேசினேன்;
கேட்காதார் சபைகூடிச் சத்தமின்றிக் கேட்டார்கள்.
தொடர்பற்ற நெளிசிந்தனைகள்
குடைந்து தொடர்கின்றனவா?
குரைத்துத் துரத்துகின்றனவா?
ஓடிக்கொண்டிருக்கின்றவனுக்கு
உள்ளதெல்லாம்
உயிர்வாழ்வுக்கல்லா
உப்பிலிக்கேள்வி
பேச்சறு
Thursday, December 30, 2010
Posted by சித்தார்த்த 'சே' குவேரா at 1:18:00 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)